This article is from Oct 27, 2020

உதயநிதிக்கு பின்னால் “திருடர்கள் ஜாக்கிரதை” என எழுதி இருந்ததா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் பேருந்தில் நிற்கும் புகைப்படத்தில் அவருக்கு பின்னால் ” திருடர்கள் ஜாக்கிரதை ” எனும் வாசகம் இடம்பெற்று உள்ளதாகவும், என்னவொரு ஒற்றுமை என மேற்காணும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வைரல் செய்து வருகிறார்கள்.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ” Picture Of The Day.. திருடர்கள்_ஜாக்கிரதை “ என உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

உண்மை என்ன ? 

” கோயமுத்தூர் ஆர்ப்பாட்டத்திற்க்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில், அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் தூத்துக்குடி எஸ் ஜோயல்” எனவேறொரு நபர் உதயநிதி உடன் இருக்கும் புகைப்படத்தை திமுகவைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இரண்டும் ஒரே இடமே.

Twitter link | Archive link 

அதேபோல், வைரலாகும் புகைப்படத்தின் உண்மையான படமும் கிடைத்தது. அதில், திருடர்கள் ஜாக்கிரதை என இடம்பெறவில்லை. சாலை சுவர்களில் எழுதப்பட்டு இருக்கும் திருடர் ஜாக்கிரதை எனும் வாசகத்தை உதயநிதி ஸ்டாலினுக்கு பின்னால் பேருந்தில் ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader