திமுக விசிக மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்த வேண்டும் என்றாரா வைகோ ?

பரவிய செய்தி
அதிகாரம் கையில் இருப்பதால் திமுக விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள வேண்டும் – திரு.வைகோ
மதிப்பீடு
விளக்கம்
வைகோ அவர்கள், ” அதிகாரம் கையில் இருப்பதால் திமுக விசிக மேல் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சாதிவெறியை நிறுத்திக்கொள்ள வேண்டும் ” என கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சேலம் மாவட்டம் கே.மோரூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைப்பதற்கு கோரிக்கை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே அனைத்துக் கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கும் இடத்தில் கொடி கம்பம் அமைக்க முயற்சித்தனர். அப்போது காவல்துறை விசிகவினர் மீது நடத்திய தடியடி, கைது நடவடிக்கை என பிரச்சனை பெரிதாகியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
