உபி-யில் “பெரியார் சிலையை” யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா ?

பரவிய செய்தி

சாமி சிலைன்னு நெனச்சு பெரியார் சிலையை திறந்து வச்சு சாமி கும்பிட்ட உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத்.

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலையை திறந்து வைத்ததாக இப்புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2022 ஜனவரி 7-ம் தேதி அவைத்யநாத் ஜி மகாராஜ் உடைய உருவச் சிலையை திறந்து வைத்துள்ளதாக ” யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படத்துடன் பதிவாகி இருக்கிறது.

Twitter link | Archive link

கோரக்பூர் மாவட்டத்தில் யோகி ஆதித்யநாத் தன்னுடைய அரசியல் குருவான மறைந்த அவைத்யநாத் மகாராஜ் உடைய திருஉருவச் சிலையை திறந்து வைத்ததோடு 1000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கியதாக செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.

உபி முதல்வர் யோகி ஆத்யநாத் திறந்து வைத்த திருஉருவச் சிலை பார்ப்பதற்கு பெரியாரின் சிலையை போன்று இருப்பதாக சிலர் யோகி ஆதித்யநாத் பதிவில் கமெண்ட் செய்துள்ளதை பார்க்க முடிந்தது.
.
முடிவு : 
.
நம் தேடலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலையை திறந்து வைத்ததாக பரவும் தகவல் தவறானது. அந்த புகைப்படத்தில் இருப்பது அவைத்யநாத் மகாராஜ் உடைய திருஉருவச் சிலை என அறிய முடிகிறது.
Please complete the required fields.




Back to top button
loader